Search This Blog

Wednesday, November 17, 2010

SAINTS - TAMIL SONGS


பாடல் - 1
இன்னிசை விளங்கும் கீதங்களில் இதயம் மகிழ்ந்து பாடிடுவோம்
மகிழ்வுடன் புனிதரின் பதம் நாடி புனிதரை ஏற்றி போற்றிடுவோம்
1. இயேசுவின் சாயலை நெஞ்சமதில் ஏற்று கொண்ட புனிதரே
பேய்களை நடுங்க செய்பவரே திக்கற்ற எமக்கு உதவியே
2. புதுமைகள் செய்யும் வல்லவரே புனித யூதா ததேயுவே
எதிசா நாட்டு அரசரையும் செபத்தால் நலம் பெற செய்தவரே
3. என்னரும் நன்மைகள் புரிகின்ற இயேசுவின் நெறுங்கிய உறவினரே
கண்ணீர் வழியும் துன்பத்திலும் கருணை காட்டும் புனிதரே
(வானமும் பூமியும் ......)

பாடல் - 2
புவியில் புதுமை புரிபவரே புனித ததேயுவே
உம் அருளை தந்திடுவீர் - வரங்கள் பொழிந்திடுவீர் - 2
1. திக்கற்றோர் எமது காவலரே (திகைக்கிறவர்களின் பேரொளியே - 2)
2. மாட்சிமிக்க திருத்தூதரே (எளிமை அதனை நேசித்தவரே - 2)
3. துன்புருவோரின் ஆறுதல் நீர் (அற்புதம் பலவும் புரிபவர் நீர் - 2)
4. இயேசுவின் அரசை வளர்த்திடவே (மறைசாட்சியாய் ஆனவரே - 2)

பாடல் - 3
புனித யூதாவே (உம்மை பணிந்து கொண்டாடும் எம்மை - 2)
இனிதே காத்தாண்டிடவே வேந்தன் இயேசுவை வேண்டிடுவீர் - 2
1. துன்பமாம் கடல் நடுவே (வருந்தும் மனிதர் துயர் நீக்கி - 2)
இன்பவான் துறை சேர எமக்கு துணையாய் வருவீரே - 2
2. பற்பல அற்புதங்களை (செய்யும் அருமை புனிதரே - 2)
உந்தன் பண்பினையே நாங்கள் என்னவென்று சொல்வோம் - 2

(அலைகடல் ஒளிர்மீனே .......)

பாடல் - 4
புனித யூதாவே உம்மை பணிந்து கொண்டாடும் எம்மை
இனிதே காத்தாண்டிடவே வேந்தன் இயேசுவை வேண்டிடுவீர் - 2
1. மாசுறா வெண்சுடர் போல் விளங்கிடும் குலமணியே
அன்பு சமாதான நெறியில் நடந்திட அருள்புரியும்
நம்பி வந்தோரை காத்திடுவீர் ஆதரித்து தேற்றிடுவீர் - 2
(இயேசுவின் இருதயமே..........)

பாடல் - 5
புனித யூதாவே ஆப்போஸ்தலரே புகழ்சேர் புனிதா
இனிதே பொழிவீர் இறைஅன்பின் வரங்களையே - 2
உம்மை அண்டி வந்தோமே எமக்காய் பரிந்து பேசுமே - 2
1. பிறப்பில் இயேசுவின் உறவானீர் புவி வாழ்வில் அவரை பின்சென்றீர்
இறப்பில் மறையின் சான்றானீர் மறு வாழ்வை நீரும் பெறலானீர்
அன்பால் எரிந்து அணலானீர் இறை அன்பை எங்கும் தரலானீர்
நன்மை செய்து நிறைவானீர் இறை பணியில் அன்று நிலையானீர்
துன்பம் நீக்கி துணையாவீர் வரும் துயரம் போக்கி தூணாவீர்
இன்பம் பெருக்கி கோலாவீர் பெரும் இருளும் ஒளிரும் சுடராவீர்
(இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உனக்காக)

பாடல் - 6
புவியோர் போற்றும் தூயவரே புனித யூதா ததேயுவே
மகிழ்வுடன் உம்மை வாழ்த்துகிறோம் மன்றாட்டை நீர் கேட்டருளும் - 2
1. பிறப்பினில் இயேசுவை பெறலானீர் பெருமைகள் இதனால் உறவானீர் - 2
சிறந்த அப்போஸ்தலருமானீர் திருச்சபை மக்களின் துணையாவீர்
2. நன்னெறி காட்டும் போதகரே நம்பிக்கை இழந்தோர் நம்பிக்கையே - 2
அன்புடன் அணைக்கும் தந்தையரே அடைக்கலம் வழங்கும் காவலரே

பாடல் - 7
எங்கள் காவலாம் சூசை தந்தையின் மங்கலங்கள் எங்கும் சொல்லி இங்கு பாடுவோம் - 2
செங்கை அதிலே தங்க புஷ்பம் தங்க கோலும் ஏந்திடும் - 2
1. கன்னித்தாயாரின் பர்த்தா நீரல்லோ - 2
உன்னதமாய் பேறும் மாட்சி உற்ற பாக்கியனே
சென்னி மகுட முடி புனைந்த மன்னர் கோத்திர மாதவா - 2
2. தந்தை என்றுன்னை வந்து பாடினோம் - 2
உந்தன் மைந்தன் சொந்தமென்று எம்மை காத்திட்டாய்
அந்திக்காலை வந்த வேளை வந்து உதவி செய்திட்டாய் - 2

பாடல் - 8
மரியம்மையின் கண்ணாளனே கிறிஸ்தேசுவின் அரும் தந்தையே - 2
தியாக பூமியில் கன்னி வயிற்றினில் யாக வேந்தன் இயேசு
தோன்ற காவல் செய்த - 2
1. நெருப்போடு சேர் நீர் தவித்ததே அதனோடு சேர் மணி சமைந்ததே - 2
பருப்போடு பாலும் பழமும் இணை நற்கருணை விருந்தை பயிர் செய்தாயே - 2
2. பழக்கங்கள் காணா புது உலகினை இயக்கங்களை தூதன் சொல்ல - 2
இணங்கிட்ட இளமை உள்ளம் உடையான் வளனே யோசேப்பே கொடை வள்ளலே - 2

No comments:

Post a Comment