Search This Blog

Monday, November 15, 2010

OUR LADY SONGS IN TAMIL

பாடல் - 1
சதா சகாய தாயே சகாய தாயே சகல மைந்தர்க்குமே
இதய உணர்ச்சி ததும்பும் உனையே தினம் நினைந்தாலே
1. உதய தாரகை இருளில் நீயென உலகம் கூறிடுமே - 2
பதமும் அடைந்தோர் பாவமும் களைவர் பரம நாயகியே
பயமும் கவலை தீர் புதுமை அன்னையும் நீ
நயமும் பெருகும் சுனையும் நீயென
நிதம் புகழ்வோமே
2. புதுமை சாலவே புரிந்தாய் பூவிலே புனித மாமரியே - 2
சுதனும் உனையே தாயென அளித்தார் சிலுவை அடியிலே
பயமும் கவலை தீர் .....................

பாடல் - 2
ஆழியின் மேல் ஒளிர் விண்மீனே
அவனியில் இறைவனின் அன்னையும் நீ
என்றும் கன்னிகை ஆனவளும்
எழிலார் விண்ணக வாயிலும் நீ
1. தூதுவன் வாழ்த்தொலி ஏற்றாய் நீ
தூய நல் அமைதியை அளிப்பாய் நீ
ஆதியில் ஏவாள் செய்வினையை
அகற்றி அவள் பெயர் மாற்றிடுவாய்
2. பாவத்தளைகளை அகற்றிடுவாய்
பரிவுடன் குருடர்க்கொளி தருவாய்
தீமைகள் அனைத்தும் போக்கிடுவாய்
திருவருட்கொடைகள் பெற்றளிப்பாய்
3. தாயென உம்மையே காட்டிடுவாய்
தணையர் எமக்காய் பிறந்தவரும்
இயேசுவாய் உம்மிடம் உதித்தவரும்
எம் குறை உம்வழி ஏற்றிடுவார்

4. நிகரில்லாத கன்னிகையே
நிர்மல சாந்த குணவதியே
பாவ பொறுத்தல் பெற்றெமக்கு
பரிவோடு புனிதம் அருள்வாயே
5. புனித வாழ்க்கை வாழ்ந்திடவே
பயணம் நன்றாய் முடிந்திடவே
அதனால் இயேசுவை யாம் கண்டு
அகமகிழ்ந்திடவே செய்வாயே
6. வானக தந்தையை வாழ்த்திடுவோம்
வானுயர் கிறிஸ்துவை வணங்கிடுவோம்
பரிசுத்த ஆவியை பணிந்திடுவோம்
நிகரில்லா புகழ் சாற்றிடுவோம்.

பாடல் - 3
ஜெபமாலை நாம் தினம் சொல்வோம் (இனி ஜெயம் நம் குடும்பத்தில் காண்போம் - 2)
1. மகிழ்வின் இரகசியம் சொல்வோம் நம் மனதில் மாண்பினை வளர்ப்போம்
குழந்தை பருவத்தை கண்டு நாம் குழந்தை மனம் கொண்டு வாழ்வோம்
2. ஒளியின் இரகசியம் சொல்வோம் உணமையில் இறையாட்சி வளர்ப்போம்
மனம் மாற அழைக்கும் இயேசுவை நம் மனதினில் வாழ செய்வோம்
3. துக்கத்தின் இரகசியம் சொல்வோம் இனி துயரத்தில் துணிவினை பெறுவோம்
பாடுகள் பாதை நம் நடையினில் நம் பரமனின் பாதம் பணிவோம்
4. மகிமை இரகசியம் சொல்வோம் நம் மாட்சியின் மாண்பினை வளர்ப்போம்
தினம் நிறைவாழ்வை காட்டும் அன்னை அவள் விசுவாசம் தினம் நாம் வளர்ப்போம்

பாடல் - 4

மயிலை நகரின் தாய் நீயே

மாபரன் இயேசுவின் தாய் நீயே

பிள்ளைகள் நாங்கள் ஓடி வந்தோம்

கனிவுடன் எம்மை அணைத்துக்கொள்வாய் - 2

அம்மா மரியே வாழ்க - 4

1. கருணையின் வடிவாக கலங்கரை விளக்காக

அன்பின் சுடராக அருளின் நிறைவாக

இருளில் ஒளியென வழியில் துணையென - 2

எமை நடத்தும் தாய் நீயே

என்றென்றும் தாய் நீயே (அம்மா....)

2. பக்தியின் உருவாக பரிவின் ஊற்றாக

உறவின் சின்னமாக உலகின் விடியலாக

காலை கதிரென சோலை நிலவென - 2

எமை தேற்றும் .......

பாடல் - 5

அன்னைக்கு கரம் குவிப்போம் - அவள்

அன்பை பாடிடுவோம் - 2

1. கன்னிமையில் இறைவன் உருகொடுத்தார் - அந்த

மன்னவனின் அன்னை என திகழ்ந்தாள் - 2

மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தாள் - 2

தினம் அவள் புகழினை பாடிடுவோம்

2. பாவமதால் மனிதன் அருளிழந்தான் - அன்று

பாசமதால் அன்னை கருணை கொண்டாள் - 2

பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் - 2

பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்

பாடல் - 6

அம்மா உந்தன் அன்பினிலே

அருள்வாய் எமக்கு அடைக்கலமே - 2

1. இறைவன் படைத்த எழிலே

இயேசுவை தந்த முகிலே - 2

தூய்மை பொழியும் நிலவே - 2

துணையே வாழ்வில் நீயே

2. புவியோர் எங்கள் புகழே

புனிதம் பொங்கும் அழகே - 2

உம்மகன் புனித உறவில் - 2

எம்மையும் வதிய செய்வாய்

பாடல் - 7

அலைக்கடல் ஒளிர்மீனே

செல்வ ஆண்டவன் தாயானே - 2

நிலை பெயரா கன்னி மோட்ச

நெறி கதவே வாழி - 2

1. வானவன் கபிரியேலின் தூய

மங்கள மொழி ஏற்பாய் - 2

ஞான சமாதான வழி நாம்

நடந்திட தயை செய்வாய் - 2

2. பாவ விலங்கறுப்பாய் குருடர்

பார்த்திட ஒளிவிடுப்பாய் - 2

சாவுரும் தீமை எல்லாம் நீக்கி

சகல நன்மை அளிப்பாய் - 2

பாடல் - 8

அழகின் முழுமையே தாயே

அலகையின் தலைமிதித்தாயே

உலகினில் ஒளி ஏற்றிடவே

அமலனை எமக்களித்தாயே - 2

1. இருளே சூழ்ந்திடும் போது

உதய தாரகை போலே

அருளே நிறைந்த மாமரியே

அருள் வழி காட்டிடுவாயே

2. அன்பும் அறனும் செய்வோம்

அன்னை உன்னை பின் செல்வோம்

உன்னை துணையாய் கொள்வோம்

என்றும் பாவத்தை வெல்வோம்

பாடல் - 9

ஆவே கீதம் பாடியே உன் புகழை பாடுவேன்

உன் அன்பின் பெருமை அகிலம் விளங்கும்

மாண்பை போற்றுவேன் - 2

ஆவே ஆவே ஆவே

1. பாவிகளின் ஆதரவே பாருலகோர்க்கொளியே - 2

அன்பின் தாய் நீயே எம் குரல் கேளம்மா - 2

2. தாயெனவே யாம் அழைத்தோம் தாயன்பில் வாழுவோம் - 2

மாய உலகினில் காத்திடுவாய் அம்மா - 2

பாடல் - 10

இனிய உன் நாமம் ஓதிடல் தினமே

அனைவரும் மகிழ்வோமே - 2

தாயினும் மேலாய் தாயுமே நீயே

தமியோர் திரவியமே - 2

அன்பிதே அன்பிதே மாதா

தன்னலமே அற்ற மாதா - 2

தாயினும் ..................

1. கலைமொழியால் உன்னை துதித்திடல் நாளும்

கவலைகள் நீங்குமம்மா - 2

பலவகை பாகும் தெளிவுறு தேனும்

தெவிட்டா உணவாமே - 2 அன்பிதே ............

2. பஞ்சமும் நோயும் பசியும் தீர

பார்த்திபன் இயேசுவையே - 2

அஞ்சலி புரிவோம் அம்மா மரியே

அனைவரும் துதிப்போமே - 2

பாடல் - 11

இதயம் மகிழுதம்மா - துயர்

கறைகள் மறையுதம்மா

உள்ளமும் துள்ளுதம்மா - உந்தன்

தாய்மையின் நினைவாலே - அம்மா

1. தாயெனும் போதினிலே மனம்

தான் உன்னை தேடுதம்மா - 2

ஈன்ற தாயும் போற்றும் உந்தன்

பாதம் பணிந்திடுவேன் அம்மா

2. வாழ்வெனும் பாதையிலே - ஒளி

விளக்காய் நீ இருப்பாய் - 2

உண்மை மனதும் உயர்ந்த நெறியும்

இணைந்து வாழ்த்திடுவேன் அம்மா

பாடல் - 12

உன்னை தேடி வந்தேன் சுமை தீருமம்மா - 2

உலகாளும் தாயே அருள் தாரும் அம்மா - 2

1. முடமான மகனை நடமாட வைத்தாய்

கடல் நீரில் தவித்த கப்பலை காத்தாய் - 2

பால் கொண்ட கலசம் பொங்கிட செய்தாய்

பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய் - 2

2. கடல் நீரும் கூட உன் கோயில் காண

அலையாக வந்து உன் பாதம் சேரும் - 2

அருள் தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம்

அன்பாகி எமக்கு அருள் தாரும் அம்மா - 2

பாடல் - 13

கலங்கரை தீபமே

கலங்களின் தாரகையே

துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே

காத்திடுவாய் தாயே - 2

1. மாதர்களின் மாதிரியே மா இருளில் ஒளி தாரகையே - 2

மாதரசியே மன ஒளி தாராய் மாசு அகல செய்வாய்

2. தாயெனவே தாவி வந்தோம் சேயெனவே எமை சேர்த்திடுவாய் - 2

பாவி என் உள்ளம் தாயுன்னை தேடும்

கூவும் என் குரல் கேளாய்

பாடல் - 14

தாயே மாமரி தஞ்சம் தாராய் தாய்மரி

மாய உலகினில் காப்பாய் தாய்மரி - 2

1. துன்ப கடல்தனில் துயரில் மூழ்கையில்

இன்பமாக இனிக்கும் உந்தன் இனிய நாமமே - 2

2. முட்கள் நடுவினில் முளைத்த லீலியே

முப்பொழுதும் கன்னியே உன் புகழை பாடுவோம் - 2

பாடல் - 15

தாரகை சூடும் மாமரியே - உன்

தாளினை பணிந்தோம் காத்திடுவாய்

1. தேவனை உலகுக்கு அளித்தவளே

தேடிய துணையை கொடுப்பவளே - 2

வாடிய மகவை அணைப்பவளே

வாழிய ஞானியர் காவலியே

2. தென்னக கன்னி கடலலையும்

பன்னெழில் இமய மாமலையும் - 2

மென்னெழிலாள் எம் தாயகமும்

உன் புகழ் பணிந்தே பாடாதோ

பாடல் - 16

தாவீதின் குலமலரே

ஒளி தாங்கிடும் அகல் விளக்கே

எனை காத்திடும் ஆரணங்கே

அருள் சுரந்திடும் தேன் சுனையே - 2

1. இறைவனே முதலில் உனை தெரிந்தார்

சிறிதில்லா காத்திருந்தார் - 2

மறையவர் போற்றும் மாமணியே

கரை சேர்ப்பதுவே உன் பணியே

2. மக்களின் மனமே மகிழ்ந்திடவே

நற்கனி சுதனை எமக்களித்தாய் - 2

கற்றவர் மற்றவர் யாவருமே

பொற்பதம் சேர்ந்திட வேண்டுமம்மா

பாடல் - 17

நாதத்தின் இனிமையில் பண்பாடுவோம்

எந்நாளுமே அன்னையின் பண்பாடுவோம்

நெஞ்சத்தில் நிறைந்திடும் நல் அன்பிற்கு

புகழ்பாக்கள் பாடிடுவோம்

ஆ....... அன்னையே வாழ்க - 2

அருளால் .... நிறைந்த ... அன்னையே நீ வாழ்க

1. இறைவனின் திருவுளத்தை

நிறைவேற்றிட மனம் உவந்தாய் - 2

என்றும் மறைபுகழ் உன் வழி இறையுளம் அறிந்திட

குறையின்றி காத்திடுவாய்

2. தரணிக்கு தாயானாய்

திருதாய்மையை பாடுகிறோம் - 2

என்றும் திருவாம் இயேசுவின் அன்பர்கள் ஆகிட

தாயே உன் அருள் தாராய்

பாடல் - 18

மாசில்லா கன்னியே மாதாவே உம்மேல்

நேசமில்லாதவர் நீசரே ஆவார்

வாழ்க வாழ்க வாழ்க மரியே - 2

1. மூதாதை தாயார் செய் முற்பவமற்றாய்

ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய்

2. உன் மகன் தானே உயிர்விடும் வேளை

எம்மை உன் மைந்தனாய் ஈந்தனை அன்றோ

3. தாயே நீ ஆனதால் தாபரித்தென்மேல்

நேசம் வைத்தாள்வது நின் கடனாமே

பாடல் - 19

மாதாவே சரணம் - உந்தன்

பாதாரம் புவிக்காதாரம் - கன்னி

மாதாவே சரணம்

மாபாவம் எமை மேவாமல் - 2

காவாயே அருள் ஈவாயே - கன்னி ..........

1. மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்

மாந்தரின் தவறால் நோவுற கண்டோம் - 2

தபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம் - 2

பாவத்திற்காக பரிகாரம் புரிவோம்

2. நானிலத்தில் சமாதானமே நிலவ

நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய - 2

உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் -2

உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம்

பாடல் - 20

மாதாவே துணை நீரே உம்மை

வாழ்த்தி போற்ற வரம் தாரும்

இதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா

ஏற்றன்பாக எமை பாரும்

1. வானோர் தம் அரசே தாயே - எம்

மன்றாட்டை தயவாய் கேளும்

ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்

எக்காலத்துமே தற்காரும்

2. ஒன்றே கேட்டிடுவோம் தாயே - யாம்

ஓர் சாவான பாவந்தானும்

என்றேனும் செய்திடாமல் காத்து

எம்மை சுத்தர்களாய் பேணும்

பாடல் - 21

மாமறை புகழும் மரியென்னும் மலரே

மாந்தருள் மாமணியே - 2

1. அமலியாய் உதித்து அலகையை மிதித்து

அவனியை காத்த ஆரணங்கே - 2

உருவில்லா இறைவன் கருவினில் மலர

உறைவிடம் தந்த ஆலயமே

2. பழியினை சுமந்த உலகினில் பிறந்து

ஒளியினை ஏற்றிய அகல் விளக்கே - 2

இருள்திரை அகற்றி அருள் வழிகாட்டி

வானக வாழ்வை அளிப்பாயே

பாடல் - 22

முதல்வனின் தாயே புதல்வர்கள் பணிந்தோம்

உதவிட வாராயோ - உந்தன்

அருளினை தாராயோ - 2

1. வாழ்ந்திட துடிக்கின்றேன் எனக்கு

வழிவகை தெரியவில்லை - 2

கைகளை பிடித்திடுவாய் - அம்மா

துயரின்றி நடந்திடுவேன்

2. இறைவனின் மகளானாய் எங்கள்

ஆண்டவன் தாயானாய் - 2

நீயின்று அறிந்திடுவாய் - உந்தன்

சேயரெம் குறைகள் அம்மா

பாடல் - 23

வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே

சிலுவை அடியினிலே சிந்தை நொந்தழுதாயோ – 2

1. பன்னிரு வயதில் ஆலயத்தில் - அன்று

அறிஞர்கள் புகழ்ந்தவரை - 2

கரங்களை விரித்து கள்வனை போல்

கழு மரத்தினில் கண்டதனால்

2. திருமண பந்தியில் கனி இரசமே

அன்று அருளிய திருமகனே - 2

குருதி சிந்தி கடற்காடியினை - இன்று

பருகிட கண்டதனால்

பாடல் - 24

சதா சகாய மாதா

சதா சகாயம் செய்யும் மாதா

தினந்தோறும் யாரும் வேண்டினாலும்

இல்லை என்னாத மாதா - 2

1. ஆதி பிதா ஆனவரின் அன்பான புத்திரியே - 2

ஜோதி சுடர் தேவன் திரு தாயான உத்தமியே

2. இஸ்பிரித்து சாந்து தேவன் இன்பமே பத்தினியே - 2

இஷ்டபிரசாத வாக்கால் என்றதும் சத்தியமே

3. வாசம் சேரும் ரோஜாப்பூவே மாசற்ற தாய்மரியே - 2

நேசமுடன் இயேசுவையே நேசிக்க செய்குவாயே

4. பாவிகளின் ஆதரவே ஆவியின் ஆலயமே - 2

நெஞ்சில் நிறை ஓவியமே நித்தமும் ஆனந்தமே

பாடல் - 25

தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி

தண்ணரும் செந்தமிழ் தென்முனை குமரியும்

தலைபணி ஜெயராணி - 2

தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி

வெண்பனி இமயம் வெள்ளமார் கங்கை

விமரிசை புரி ராணி - 2

1. தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி

வங்கமார் கலிங்கம் கொங்கணம் மலையாளம்

குதுகலி மகராணி - 2

தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி

ஆந்திரம் குடகும் அகில மராட்டம்

ஆண்டிடு மகாராணி - 2

பாடல் - 26

தாயின் மடிதான் உலகம் அவள்

தாளை பணிந்திடுவோம் - 2

அவள் சேயின் மடிதான் மோட்சம்

நம் இயேசுவை தொழுதிடுவோம் - 2

1. பிள்ளை என்றும் வாழ நல்லது எல்லாம் தருவாள் - 2

அவள் உள்ளம் என்றும் மகிழ்

உண்மை வழியில் நாம் நடப்போம்

2. அன்னை மரியாள் உள்ளம் ஆழம் காணா கடலாம் - 2

அன்பு கருணை உருவாய்

ஆண்டவன் தந்த அரும்பொருளாம்

3. வங்க கடற்கரையோரம் அழகாய் அமர்ந்துள்ள தாயாம் - 2

தங்க நிலாவின் ஒளியால்

தாரகை சூடும் சகாயமாதா

பாடல் - 27

தினமும் வாழ்த்துவோம் ஓ அன்னையே

நாம் தொழுதுன்னை ஏற்றி

தினமும் வாழ்த்துவோம்

1. தினமும் உனது பதத்தை ஏற்றி

வனமே அரும்பும் மலரை தூற்றி

மனமே உனது புகழை சாற்றி - 2

தனமார் அன்னையென்றுனையே போற்றி

2. சிறுமை நிறைந்த மனிதன் பூச்சி

வெறுமை அடர்ந்த உலக காட்சி

அருமை உமது தயையின் மாட்சி - 2

பெருமை அதற்கு உலகம் சாட்சி

பாடல் - 28

தேவதாயின் மாதம் இது அல்லவோ

இதை சிறப்பாய் கொண்டாடிடவே

புறப்பட்டு வாரீர் தோழா

1. தோட்டங்களில் உள்ள பல வாட்டமில்லா புஷ்பங்களை

சோடு சோடாய் சேர்த்து நல்ல மாலை கட்டுவோம் - 2

கூட்டமாக எல்லாம் சேர்ந்து வீட்டிலுள்ள பேரை சேர்த்து - 2

கோயிலுக்கு சாயராட்சை ஆவலுடன் போவோம் வாரீர்

2. ஒவ்வொரு வீட்டார்களெல்லாம் ஒவ்வொரு நாள் சிறப்பிக்க

ஒப்பந்தமே செய்தால் ஒரு தப்புமில்லையே - 2

இவ்விதமாய் செய்தால் பலன் எவ்வளவோ கூடி வரும் - 2

இந்த மாதம் எல்லோருக்கும் நல்லதிரிஷ்டம் உள்ளதாகும்

3. பூவிலுள்ள மானிடர்க்கு தேவசுதன் தந்த அன்னை

புண்ணிய வரங்கள் எல்லாம் கொண்ட அன்னையே - 2

ஆவலுடன் நாம் எல்லோரும் தேவமரி பாதம் கூடி - 2

ஆனந்த மிகுந்த பல கீதங்களை பாடுவோமே

பாடல் - 29

வந்தோம் உம் மைந்தர் கூடி ஓ மாசில்லா தாயே

சந்தோஷமாக பாடி உன் தாள் பணியவே - 2

1. பூலோகம் தோன்றும் முன்னே ஓ பூரண தாயே

மேலோனின் உள்ளந்தன்னில் நீ வீற்றிருந்தாயே

2. தூயோர்களாம் எல்லோரும் நீ தோன்றும் நாளினை

ஓயாமல் நோக்கி பார்த்து தம் உள்ளம் மகிழ்ந்தாரே

3. வானங்கள் கீதம் பாட நல் மாந்தர் தேடிட

தீயோனும் கண்டு ஓட நீ உற்பவித்தாயே

பாடல் - 30

அலையொளிர் அருணனை அணிந்திடுமாம்

மணிமுடி மாமரியே - 2

வாழ்க்கையின் பேரரசி வழுவில்லா மாதரசி - 2

கலையெல்லாம் சேர்ந்தெழும் தலைவியும் நீயல்லோ

காலமும் காத்தருள்வாய்

1. அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே - 2

பொல்லாத கூலியின் தொல்லைகள் நீங்கிட

வல்ல உன் மகனிடம் கேள்

2. அகோர போர் முழங்கி அல்லலும் தோன்றுதன்றோ - 2

எல்லோரும் விரும்பிடும் நல்லதோர் அமைதியை

சொல்லாமல் அளித்திடுவாய்

பாடல் - 31

அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி

என்றும் உந்தன் புகழை பாடுவோம்

தேடும் மாந்தரை தேற்றிக்காத்திடும்

உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் - 2

1. எண்ணிறந்த உதவிகளை பெற்று தந்த நீ

எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் - 2

நன்றி பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்

சகாயத் தாய்மரியே - எம்மை

அரவணைத்து காப்பாய் நீயே - 2

2. அண்ணல் இயேசு அன்பின் வழியை கற்று தந்த உன்

அன்புமிகு ஆதரவில் அச்சம் நீங்குதே - 2

நன்றி பூக்கள் ...............

பாடல் - 32

ஆகாட்டும் என்ற சொல்லாலே இந்த

அகிலமே போற்றும் தாயானீர் - 2

சகாய அன்னையே எம்மை பேணிக்காப்பவளே

நிறை ஆசீர் எம்மேல் நிறைவாய் பொழிந்து

நாளும் தாருமே - 2

1. தன்னையே தாழ்த்தி இறைவனை

ஏற்ற தாழ்ச்சியின் சிகரமே

தன்னலம் இல்லா சேவையில் சிறந்த

தியாகத்தின் சின்னமே

மண்ணகம் விண்ணகம் இரண்டையும் இணைத்த

உறவின் பாலமே - 2

உம்மை போற்றுகிறோம் புகழ் பாடுகிறோம்

நீர் வாழ்க வாழ்கவே - 2

2. பொறுமையில் எல்லை நிகர் உமக்கில்லை

பார்புகழ் அன்னையே

வறுமைகள் நீக்கும் வன்மைகள் போக்கும்

வான்புகழ் அன்னையே

கனிந்த உன் விழியால் நிதம் எமை தேற்றும்

சகாய அன்னையே - 2

உம்மை போற்றுகிறோம் ........

பாடல் - 33

அம்மா அமுதினும் இனியவளே

அமலியாய் உதித்தவளே

அகமே மகிழ்வாய் மரியே - 2

1. தேவனாம் ஆண்டவரை பூமியில் ஈன்றவளே - 2

அருளினிலே உறைந்தவளே

அடியவர் நாவில் நிறைந்தவளே

2. அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலைமிதித்தாய் - 2

அவனியிலே அருள் பொழிவாய்

அடியவர் தாயாய் அமைந்திடுவாய்

பாடல் - 34

கடற்கரை சகாய மாதா

கலங்கமில்லா தேவமாதா

பாவ வினை தீர்ப்பாள்

பதம் உனை சேர்ப்பாள்

நிதம் துணை கேட்பாயே - 2

1. ஆறாத மனப் புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை

தீராத துயர்தன்னை தீர்த்திடுவாள் - 2

மாறாத கொடுமை நீங்காத வறுமை

தானாக என்றுமே மாற்றிடுவாள் - 2

2. கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி

உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2

வெள்ளம் போல் அவள் கருணை பாய்ந்திட

தேனூறும் வான் வாழ்வு தந்திடுவாள் - 2

பாடல் - 35

சகாயத்தாயின் சித்திரம் நோக்கு

அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு

எத்துனை கனிவு எத்துனை தெளிவு

ஏங்கிடும் மனதிற்கு வரும் நிறைவு

1. குத்தி பிளந்திடும் ஈட்டியும் ஆணியும்

கொடூர சிலுவையும் கண்டு மிரண்டு - 2

தத்தி தவனியில் சாய்ந்திடும் இயேசுவை

சதா உன் நினைவினில் பதித்திடுவாய் - 2

2. அம்மா என்று கூவ

அபயம் தந்து வருவாள் - 2

இம் மாநிலத்தில் இவள் போல் - 2

இரங்கும் தாயும் உளரோ - 2

பாடல் - 36

ஞானம் நிறை கன்னிகையே

நாதனை தாங்கிய ஆலயமே - 2

மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2

பலிபீடமுமாய் அலங்கரித்தாயே

1. பாவ நிழலே அணுகா

பாதுகாத்தார் உன்னையே பரமன்

பாவ நிழலே அணுகா

தாய் உதரம் நீ தரித்திடவே - 2

தனதோர் அமல தலமென கொண்டாய்

2. வாழ்வோர் அனைவரின் தாயே

வானுலகை அடையும் வழியே

வாழ்வோர் அனைவரின் தாயே

மக்கள் இஸ்ராயேல் தாரகையே - 2

வானோர் துதிக்கும் இறைவியே வாழி

பாடல் - 37

ஜென்ம பாவம் இல்லாமலே உற்பவித்த இராக்கினியே - 2

நாங்கள் எல்லாம் உன் பதத்தை நாடி வந்தோம் நாயகியே

மரியே மரியே ஆதரிப்பாய் தோத்திரமே - 2

1. பேய் மயக்கம் பாவ வழி நின்று எம்மை காத்திடுவாய் - 2

தூய வெள்ளி லீ மலர் போல் தோன்றினையே பூமி தன்னில்

மரியே .............

2. மணிமுடி தாங்கி நிற்கும் மகிமையின் அரசியே - 2

வானவரும் மானிடரும் வாழ்த்தி உம்மை போற்றுகிறோம்

மரியே ...................

பாடல் - 38

வான்லோக ராணி வையக ராணி

மண்மீதிலே புனித மாது நீ - 2

1. விண்ணொளிர் தாரகை தாயே நீ

தண்ணோளிர் நேர்த்தியே ஆரணி - 2

பாவமேதும் இல்லா சீலி

பாவிகளின் செல்வ ராணி

பாதுகாத்து ஆளுவாயே நீ

2. ஜென்ம மாசில்லா மாதரசி

செம்மை சேர் மங்கையர் ராணி நீ - 2

பாவமேதும் .................

பாடல் - 39

வங்க கடற்கரை ஓரத்திலே நாடி வருவோரின் நம்பிக்கையாய்

அருள் மழை பொழியும் அருட்தலத்தில் எழிலாய்

பறந்திடும் (விளங்கிடும்) திருவுருவம்

நம் கடற்கரை சகாய அன்னை உருவம் - 2

வருவோம் இறை நம்பிக்கையில் அருள் பெறுவோம் அன்னை பரிந்துரையில் - 2

1. கடலின் சீற்றம் மிகுந்த நாளில் எங்கள் பகுதியை காப்பாற்ற - 2

உந்தன் கெபியை கடலுக்கு காணிக்கை ஆக்கினாயே - 2

கடற்கரை சகாய தாயே இறை இயேசுவிடம் எமக்காய் வேண்டிக்கொள்ளும்

ஆஆஆ ..............

2. சுனாமி பேரலை வந்த வேளை தாயே என்று நாங்கள் கூவி அழைக்க - 2

அன்று எம்மை காப்பாற்றி இன்றும் என்றும் உடனிருக்கும் கருணை தாயே

கடற்கரை சகாய தாயே ......

பாடல் - 40

தயை நிறை தாயே அரசியே வாழ்க

எம் வாழ்வின் வளமும் இனிமையும் நீயே

உம்மையே நோக்கி ஏவையின் மைந்தர்

அம்மா எனவே அன்புடன் அழைத்தோமே

கண்ணீர் கணவாய் தனிலிருந்தே எம்

கவலை குரலை கனிவுடன் கேளும்

பாவிகள் எமக்காய் பரிந்திடும் தாயே

பரிவு கண்ணோடு எம்மையே பாரும்

எம் சிறு வாழ்வு இங்கே முடிந்தவுடன்

உம் திருமகனின் திருமுகம் காட்டும்

அன்பே அருளே கன்னி மரியே - 2

அன்னை நீயே ஆதரிப்பாய் எம்மையே

பாடல் – 41

§¾ÅÀ¡Ä¨É ¦Àü¦ÈÎìÌõ ÓýÒ ¸ýÉ¢¨¸Â¡É Á¡Á¡¢§Â

±í¸û ¬ýÁ º¡£Ã àö¨Á À¡Ð¸¡ò¾ÕÙõ

§¾ÅÀ¡Ä¨É ¦Àü¦ÈÎìÌõ §À¡Ð ¸ýÉ¢¨¸Â¡É Á¡Á¡¢§Â

±í¸û ¬ýÁ º¡£Ãàö¨Á À¡Ð¸¡ò¾ÕÙõ

§¾ÅÀ¡Ä¨É ¦Àü¦ÈÎò¾ À¢ýÒõ ¸ýÉ¢¨¸Â¡É Á¡Á¡¢§Â

±í¸û ¬ýÁ º¡£Ãàö¨Á À¡Ð¸¡ò¾ÕÙõ

«õÁ¡ ¸¡ò¾ÕÙõ ¸¼ü¸¨Ã º¸¡Â ¾¡§Â À¡Ð¸¡ò¾ÕÙõ

À¡¼ø - 42

«Æ§¸¡Å¢Â§Á ±í¸û «ý¨É Á¡¢§Â

¯Â¢§Ã¡Å¢Â§Á ¸¼ü¸¨Ã º¸¡Â¾¡§Â - 2

(¯õ) À¡¾õ ¦º¡øÖõ ¸Õ¨½Ôõ

À¡¾ÁÄ¡¢ý «Õ¨ÁÔõ - 2

«Æ§¸ «Æ§¸ ±í¸û «õÁ¡ ¿£ «Æ§¸ - 2

1. ¬¾¡Ãõ ¿£§Â ±ýÚ «ñÊÅէš÷ìÌ ±øÄ¡õ

¬¾Ã× ¾ÕÀÅ§Ç ¸¼ü¸¨Ã º¸¡Âò¾¡§Â - 2

«õÁ¡ ¿£ ±í¸ÙìÌ ¸¡ðº¢ ¾Õõ §À¡¾¢É¢§Ä

«ý§À¡Î ±ó¾ý ¸Ãõ ¯õ¨Á ¸ñÎ ¯Â÷¸¢È§¾

¸ñ½¢ý Á½¢¨Â §À¡Ä ±ý¨É ¸¡ò¾¢Îõ ¦¾öÅ ¾¡§Â

¯õ¨Á ¿¡Ê Å󧾡õ ¯õ ¾¢Õ Ó¸ò¨¾ ¸ñ§¼¡õ

¯ó¾ý Ó¸ò¨¾ ¸¡Ïõ §À¡Ð ¦¿ïºõ Á¸¢Ø§¾

¯ó¾ý ¿¡Áò¨¾ ¦º¡øÖõ §À¡Ð ¦¿ïºõ þÉ¢ì̧¾

2. §¸¡¼¡É §¸¡Ê Áì¸û ̨ȸ¨Ç ¾£÷ôÀŧÇ

¦¸¡û¨Ç «Æ§¸¡Î ±í¸û «Õð¾Äõ «Á÷ó¾Å§Ç - 2

«õÁ¡ ¯ý ¸¡ðº¢¦ÂøÄ¡õ ²¨Æ¸Ç¢ý À¡ì¸¢Â§Á

«ý§À¡Î ±í¸ÙìÌ ¯¾Å¢Îõ ¯ý ¾¢Õì¸Ã§Á

¡Õõ þøÄ¡ ²¨Æ ±í¸û ¾ïºõ ¿£§Â ¾¡§Â

À¡¨¾ Á¡Úõ §Å¨Ç ¿£ ¸¡ôÀ¡ö ¯ó¾ý §º¨Â

¯ó¾ý ............

À¡¼ø - 43

¾¡§Â ¯ý¨É ¸¡½ Åó§¾ý ¾¨Â¦¸¡ñÎ §Àº §ÅñÎõ

¾¨Â ¦¸¡ñÎ §Àº¢Å¢ð¼¡ø ¬Éó¾ò¾¢ø ţΠ¦ºø§Åý - 2

1. ¯ý ÁÊ¢ø ¾ÅúóÐ ÅÕõ ¯ý Á¸¨É §¸ð¸¢ý§Èý - 2

¯Â¢ÕûÇ ¿¡û Ũâø ¯ó¾ý «ýÀ¢ø Å¡ú§Åý «õÁ¡ - 2

2. ¯ýÉÕû §ÅñÊ ¿¢üÌõ ±í¸¨Ç À¡ÕÁõÁ¡ - 2

¸ñ½¾É¢ý þ¨Á¨Âô §À¡Ä ¿¡Ùõ ¸¡ÕÁõÁ¡ - 2

À¡¼ø - 44

Å¢ñ½ôÀò¨¾ ÀÊò¾¡Â¡ ±ý ±ñ½í¸¨Ç ¦¾¡¢ó¾¡Â¡

¸ñ½¢¨Ã Ш¼ôÀ¡Â¡ ¸Äì¸ò¨¾ ¾£÷ôÀ¡Â¡ - 2

º¸¡Â Á¡¾¡§Å - 2 ¸¼ü¸¨Ã º¸¡Â Á¡¾¡§Å «ýÀ¢ý Á¡¾¡§Å - 2

1. º¾¡ ¯ý¨É ¿¢¨ÉóÐ Å¡úÅ¢ø º¸¡Âõ §¾Î¸¢§Èý - 2

±¾¡ÅÐ «Õ¨Ç ±ÉìÌ ¿£ ¾Ã¡Ð §À¡Å¡§Â¡ - 2

2. «õÁ¡ ±ý§È «¨ÆòÐ ¯ýÉ¢¼õ «ýÈ¡¼õ ÅÕ¸¢ý§Èý - 2

±ýÉ¡Ìõ ¯ý À¢û¨Ç ¯ý «ýÒ þøÄ¡Áø §À¡É¡§Ä - 2

3. º¸¡Âõ §Åñʧ ¿¡§É ¯ý À¡¾õ µÊ Åó§¾ý - 2

º¸¡Âõ ¸¢¨¼ì¸¡Áø ¿¡Ûõ ¯ý¨É Å¢ðÎ §À¡§Å§É¡ - 2

4. «õÁ¡ ±ýÚ ¿¡§É «ØÐ §º¡÷óÐ Åó¾ §Å¨Ç¢§Ä - 2

º¸¡Âõ ¦ºö¦¾ý¨É ¸¡ìÌõ «ýÒò¾¡ö ¿£¾¡§É - 2

À¡¼ø - 45

º¸¡Âò¾¡§Â «Õû Ò¡¢Å¡ö - ¯ý

ºýÉ¢¾¢ Å󧾡õ Ш½ ÅÕÅ¡ö - 2

1. ¦ºÀ¢òÐ ¦ºÀ¢òÐ ¯ý¨É «¨Æ쨸¢§Ä

ÁÉõ Á¸¢úóÐ Á¸¢úóÐ ¯ý¨É À¡Î¾õÁ¡ - 2

¿¢Æ¦ÄÉ ¦¾¡¼÷óÐ ¿¢¨ÉŢɢø Å¡ú§Å¡õ

¿¢¨È ´Ç¢§Â ¿£ šƢ§Š- 2

2. «¨ÉòÐ «¨ÉòÐ ±õ¨Á ¸¡ôÀŧÇ

¾¢Éõ «¨Á¾¢ ±õÁ¢§Ä §º÷ôÀÅ§Ç - 2

¸Õ½¡¸¡¢§Â ¸üÀ¸ §º§Â

¸¾¢ ¾Õõ §¾Å ;ý ¾¡§Â – 2

À¡¼ø - 46

¸¢Õ¨ÀÔõ ¾¨Â ¯ûÇ Á¡¾¡§Å þá츢ɢ§Â Å¡ú¸

¾ïº§Á ÁÐçÁ Š§¿¸¢¾§Á Á¡Á¡¢§Â Å¡ú¸ - 2

Å¡ú¸ Á¡Á¡¢§Â Å¡ú¸ ¾¡ö Á¡¢§Â - 2

¸¢Õ¨ÀÔõ...........

À¡¼ø - 47

«üÒ¾ ¸¼ü¸¨Ã º¸¡Â ¾¡§Â! ¸¼Ä¨Ä¢ý «ÃŨ½ôÀ¢ø Å£üÈ¢ÕìÌõ «õÁ¡.

¯ÁÐ ÌÆ󨾸û ¿¡í¸û ¯õ¨Á §Åñθ¢§È¡õ. - 2

1. ¸¼×Ç¢ý «ý¨É§Â ¾¡§Â ¯õ¨Á§Â

¿¡í¸û À¢ýÀüÈ¢ ¿õÀ¢ì¨¸§Â¡Î

¯õ¨Á ÀüÚ즸¡ñÎ Å¡úÅ¢ø þ¨ÈÂÕû

¦ÀüÈ¢¼ ¿¢¨È¡º£÷ ¾¡Õõ «õÁ¡.

2. À¡ºò§¾¡Î ±õ¨Á À¡Ð¸¡ìÌõ «ý¨É§Â

ÀÃÁ¾ó¨¾Â¢¼õ ±Á측ö À¡¢óÐ §ÀÍõ «õÁ¡

¾£Ã¡¾ §¿¡ö¸¦ÇøÄ¡õ ¾£÷ôÀÅ÷ ¿£§Ã

¿õÀ¢ì¨¸§Â¡Î Åէš÷ìÌ ¬Ú¾ø ¿£§Ã

3. ¿ýȢ¡ø ¯õ À¡¾õ À½¢¸¢ý§È¡õ

¸¼ü¸¨Ã º¸¡Â ¾¡§Â

¬§Ã¡ì¸¢Âò¨¾ Á¨Æ¡ö ¦À¡Æ¢ÀŧÇ

¿ü͸ò¨¾Ôõ ÁÉ «¨Á¾¢¨ÂÔõ

¿¢¨ÈÅ¡ö ¾¡Õõ «õÁ¡

4. »¡Éò¾¢Öõ «È¢Å¢Öõ ÅÇ÷ó¾¢¼§Å

§Å¨ÄÅ¡öôÒõ Å¡ú쨸ò ¾ÃÓõ ¦ÀüÈ¢¼§Å

¯õ ¾¢ÕÁ¸ý þ§ÂÍÅ¢¼õ ÁýÈ¡Îõ ¾¡§Â

±í¸û ¯¨Æô¨ÀÔõ ¦¾¡Æ¢¨ÄÔõ

¬º£÷ž¢Ôõ «õÁ¡

5. ±í¸ÙìÌ §À¡¾¢Â Á¨Æ¨Â ¾óÐ

Å¢¨Çîº¨Ä ¦ÀÕìÌõ «õÁ¡

ÍÀ¿¢¸ú¸Ùõ ÌÆó¨¾ À¡ì¸¢ÂÓõ

¸¢¨¼ò¾¢¼×õ ¾¨Â Ò¡¢Ôõ ¾¡§Â

6. «ýÀ¢ý ¿¢¨È§Å «ý¨É§Â

ºÓ¾¡Âò¾¢ø ¿£¾¢ §¿÷¨Á ¿¢¨Äò¾¢¼×õ

±õÁ¢ø ÁÉ¢¾§¿Âõ ÅÇ÷ó¾¢¼×õ «Õû¾¡Õõ

¯õ ÅƢ¡ö ¦ÀüÚ ¦¸¡ûÙõ ¿ý¨Á¸ÙìÌ ®¼¡¸

7. ±ý «ÂÄ¡¡¢ý ÐýÀò¾¢ø Ш½ ¿¢ü¸

¿øÄ Áɨ¾ ¾¡Õõ

¯õ ¾¢ÕÁ¸ý þ§ÂͨÅô §À¡ø ¸¼×ÙìÌõ ÁÉ¢¾ÕìÌõ

¯¸ó¾Å÷¸Ç¡ö Å¡Æ ÅÃÁÕÙõ.

À¡¼ø - 48

º¾¡ º¸¡Â Á¡¾¡

ºò¾¢Â §¾Å¾¡§Â

¿¢ý Áì¸û ±í¸Ù측ö

ÁýÈ¡¼ §ÅñÎõ «õÁ¡ - 2

1. ÐýÀò¾¢ø Å¡Øõ Áì¸û ¬Â¢Ãõ ¬Â¢ÃÁ¡ö

¸ñ½£÷ ¸ÉÅ¡ö ¿¢ýÚ ¯õ¨Á¡õ ¦¸ï͸¢§È¡õ - 2

2. þ§¾¡ ¯ý «ý¨É ±ýÚ ±õ Á£ðÀ÷ þ§ÂÍ ¦º¡ýÉ¡÷

þõ¨Á¢ø ±õ¨Á §¾üÈ ¯õ¨ÁÂýÈ¢ ¡ÃõÁ¡ - 2

À¡¼ø - 49

«ý¨É Á¡¢Â¡Ç¢ý Ò¸úÁ¡¨Ä

*ÍÅ¡Á¢ ¸¢Õ¨À¡¢Õõ

¸¢È¢ŠÐ§Å ¸¢Õ¨À¡¢Õõ

¸¢È¢ŠÐ§Å Áýȡ𨼠§¸ð¼ÕÙõ

¸¢È¢ŠÐ§Å ¾ÂÅ¡ö §¸ð¼ÕÙõ

*Å¢ñ½¸ ¾ó¨¾ þ¨ÈŧÉ

¯Ä¸ò¨¾ Á£ð¼ ;ý §¾Å¡

ࠬŢ þ¨ÈŧÉ

±í¸û §Áø þÃì¸Á¡Â¢Õõ

*ÒÉ¢¾õ ¿¢¨Èó¾ Á¡¢Â¡§Â

þ¨ÈÅÉ¢ý ÒÉ¢¾ Á¡¾¡§Å

¸ýÉ¢ÂÕû ¿øÄ ¸ýÉ¢¨¸§Â

±í¸Ù측¸ §ÅñÊ즸¡ûÙõ

*¸¢È¢ŠÐÅ¢Û¨¼Â Á¡¾¡§Å

§¾Åô À¢Ãº¡¾ò¾¢ý Á¡¾¡§Å

Á¸¡ Òò¾¢ÔûÇ Á¡¾¡§Å

*«ò¾¢Âó¾ Å¢Ãò¾¢ Á¡¾¡§Å

ÀؾüÈ ¸ýÉ¢ Á¡¾¡§Å

¸ýÉ¢ àö¨Á ¦¸¼¡¾ Á¡¾¡§Å

*«ýÒìÌ ¯¡¢Â Á¡¾¡§Å

¬îº¡¢Âõ ¯ûÇ Á¡¾¡§Å

¿øÄ¡§Ä¡º¨É Á¡¾¡§Å

*º¢Õ‰Ê¸Õ¨¼Â Á¡¾¡§Å

þÃðº¸Õ¨¼Â Á¡¾¡§Å

Á¸¡ Òò¾¢ÔûÇ Á¡¾¡§Å

*Žì¸òÐìÌ¡¢Â ¸ýÉ¢¨¸§Â

о¢ì¸§Â¡¸¢ÂÁ¡É ¸ýÉ¢¨¸§Â

ºì¾¢Ô¨¼ò¾¡É ¸ýÉ¢¨¸§Â

*¾¨Â Á¢Ìó¾ ¸ýÉ¢¨¸§Â

¾ÕÁò¾¢Û¨¼Â ¸ñ½¡Ê§Â

»¡Éò¾¢ý ¿øÄ þÕôÀ¢¼§Á

*±í¸û Á¸¢ú¢ý ¸¡Ã½§Á

»¡Éõ ¿¢¨Èó¾ À¡ò¾¢Ã§Á

Á¸¢¨ÁÌ¡¢Â À¡ò¾¢Ã§Á

*«ò¾¢Âó¾ Àì¾¢Á¢Ì À¡ò¾¢Ã§Á

§¾Å Á¨È¦À¡Õû §Ã¡ƒ¡ ÁħÃ

¾¡Å£Ð «Ãº¡¢ý ¯ôÀ¡¢¨¸§Â

*¾ó¾ ÁÂÁ¡É ¯ôÀ¡¢¨¸§Â

¾í¸ ÁÂÁ¡É ¬Ä§Á

Å¡ìÌò¾ò¾ò¾¢ý ¦À𼸧Á

*Àçġ¸ò¾¢Û¨¼Â Å¡º§Ä

Å¢ÊÂü¸¡Äò¾¢ý Å¢ñÁ£§É

Ţ¡¾¢ì¸¡Ã÷ìÌ ¬§Ã¡ì¸¢Â§Á

*À¡Å¢¸ÙìÌ «¨¼ì¸Ä§Á

ÐýÀôÀΧš¡¢ý §¾üÈçÅ

¸¢È¢Š¾Å÷¸Ç¢ý º¸¡Â§Á

*ºõÁÉÍì¸Ç¢ý þá츢ɢ§Â

À¢¾¡ôÀ¢¾¡ì¸Ç¢ý þá츢ɢ§Â

¾£÷츾¡¢º¢¸Ç¢ý þá츢ɢ§Â

*«ô§À¡Š¾Ä÷¸Ç¢ý þá츢ɢ§Â

§Å¾º¡ðº¢¸Ç¢ý þá츢ɢ§Â

о¢Â÷¸Ù¨¼Â þá츢ɢ§Â

*¸ýÉ¢Â÷¸Ù¨¼Â þá츢ɢ§Â

«¨ÉòÐ ÒÉ¢¾¡¢ý þá츢ɢ§Â

¦ƒýÁ À¡Åõ þøÄ¡ þá츢ɢ§Â

*§Á¡ðº ¬§Ã¡¸½ þÃ츢ɢ§Â

¾¢ÕÀÁ¡¨Ä¢ý þá츢ɢ§Â

ºÁ¡¾¡Éò¾¢ý þá츢ɢ§Â

*«¨ÉòÐ À¨¼ôÒì¸Ç¢ý þá츢ɢ§Â

«¨ÉòÐ ÌÕì¸Ç¢ý þá츢ɢ§Â

¸¼ü¸¨Ã º¸¡Â Á¡¾¡§Å

¯Ä¸ò¾¢ý À¡Åí¸¨Ç §À¡ìÌõ

¯ò¾Á ¦ºõÁÈ¢ Òըšõ

¯ýɾ þ§ÂÍ ¸¢È¢ŠÐ§Å

1.±í¸û À¡Åí¸¨Ç §À¡ì¸¢ÂÕÙõ

2.±í¸û Áýȡ𨼠§¸ð¼ÕÙõ

3.±í¸û §Áø þÃì¸Á¡Â¢Õõ

þ§ÂÍ ¸¢È¢ŠÐÅ¢ý Å¡ìÌÚ¾¢¸ÙìÌ ¿¡í¸û ¾Ì¾¢ÔûÇÅ÷¸û ¬ÌõÀÊ

*¸¼ü¸¨Ã º¸¡Â Á¡¾¡§Å ±í¸Ù측¸ §ÅñÊ즸¡ûÙõ

¦ºÀ¢ô§À¡Á¡¸:

þ¨ÈÅ¡! ÓØ Áɧ¾¡Î ¾¢Õò¾¡ú À½¢óÐ ¸¢¼ì¸¢ýÈ ±í¸û ÌÎõÀí¸¨Ç À¡÷òÐ, ±ô¦À¡ØÐõ ¸ýÉ¢¨¸Â¡É à Á¡¢Â¡Ç¢ý §Åñξġ§Ä, «¨ÉòÐ ±¾¢¡¢¸Ç¢ý À¢Ê¢ĢÕóÐõ ±õ¨Á Á£ðÎ측ò¾ÕÙõ. þó¾ ÁýÈ¡ðÎì¸¨Ç ±øÄ¡õ ±í¸û ¬ñ¼ÅḢ þ§Â͸¢È¢ŠÐ ¿¡¾÷ ÅƢ¡¸ §ÅñÊ째𸢧ȡõ. ¬¦Áý.

No comments:

Post a Comment