
பாடல் - 1
இறந்தோர் வாழ்வு ஒளி பெறுக - அவர்
இறைவா உம்மிடம் வந்தடைக - 2
1. நின் ஒளி அவர் மேல் ஒளிர்ந்திடுக
புவி நிதம் அவர் நினைவில் நிலைத்திடுக - 2
தீயவை யாவும் விலகிடுக - 2 அவர்
நிதம் உம் மகிழ்வில் நிலைத்திடுக
2. விண்ணக சீயோன் நகரினிலே
நிதம் பண்ணால் உம் புகழ் அவர் இசைக்க - 2
புனித வான தூதருடன் - 2
உம்மை புகழ்ந்திடும் பேறு அவர் பெறுக
பாடல் - 2
நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்தருளும் ஆண்டவரே
முடிவில்லாத ஒளி அவர்கள் மேல் ஒளிர்வதாக
1. இறைவா சீயோனில் உம்மை பாடுதல் ஏற்றதாம்
எருசலேமில் உமக்கு புகழ்ச்சி பொறுத்தனை செலுத்தப்படும்
நீர் எம் மன்றாட்டை கேட்டருளும்
மாந்தர் அனைவரும் உம்மிடம் வருவர்
No comments:
Post a Comment