Search This Blog

Thursday, July 8, 2010

புனித செசிலியம்மாள் மன்றாட்டு மாலை


ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கனிவாக கேட்டருளும்

விண்ணக தந்தை இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதன் தேவா ........
தூய ஆவியாகிய இறைவா .........
தூய மூவொரு இறைவா .........
கன்னியர்களின் அரசியான புனித மரியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித செசிலியம்மாளே .........
உரோமையில் உயர் குடியில் பிறந்தவரான புனித செசிலியம்மாளே .........
கன்னிமையை மீட்பர் இயேசுவுக்கு அர்ப்பணித்தவரான புனித செசிலியம்மாளே ...
பெற்றோருக்கு கீழ்படிந்து வலேரியன் என்பவரை மணந்தவரான புனித செசிலியம்மாளே .........
தூய்மையான உள்ளத்தையும் கரைபடா உடலையும் கொண்டவரான புனித செசிலியம்மாளே .........
உம் காவல் தூதரை துணையாக கொண்டு உம் கணவரையும் அவர் சகோதரன் தபூசியசையும் மனம் மாற்றிய புனித செசிலியம்மாளே .........
கணவரின் துணையுடன் பல இரக்க செயல்களை செய்த புனித செசிலியம்மாளே
வேதத்திற்காக கணவன் கொல்லப்பட்ட பின்னும் துணிவுடன் இறை இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டு இருந்த புனித செசிலியம்மாளே .........
பொய் தெய்வங்களுக்கு பலியிட மறுத்து மறைசாட்சி முடி ஏற்க ஆவலுடன் காத்திருந்த புனித செசிலியம்மாளே .........
கொதிக்கும் தண்ணீரில் போடப்பட்டும் இறை வல்லமையால் காக்கப்பட்ட புனித செசிலியம்மாளே .........
மும்முறை கழுத்தில் வாளால் தாக்கப்பட்டும் மரணம் அடையாத புனித செசிலியம்மாளே .........
கொடுமையான காயங்களுடன் மூன்று நாள் வரையும் இறைவனுக்கு நன்றி கூறி அவரை புகழ்ந்து பாடிய புனித செசிலியம்மாளே .........
உடமைகளையெல்லாம் திருச்சபைக்காக கொடுத்த புனித செசிலியம்மாளே .........
சாகும் முன் இறுதி திருவருட்சாதனத்தையும் நற்கருணை ஆசீரையும் பெற்றவரான புனித செசிலியம்மாளே .........
இறந்து 1400 ஆண்டுகளுக்கு பிறகும் உடல் அழுகாமல் காக்கப்பட்ட புனித செசிலியம்மாளே .........
திருஇசைக்கும் பாடகர்குழுவுக்கும் பாதுகாவலியான புனித செசிலியம்மாளே ......
உலகின் பாவங்களை .........
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி
புனித செசிலியம்மாளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக:
இசையால் புகழப்படும் இறைவா! புனித செசிலியம்மாளை கற்பு வாழ்வுக்கும், கீழ்படிதல், இரக்க செயல்கள் அனைத்துக்கும் மாதிரியாக அளித்தீரே. நாங்களும் எங்கள் குரல்களால் இறைவனை புகழவும், அவரது அதிமிகு மகிமைக்காக வாழ்வில் வரும் துன்பங்களை ஏற்று உம் திருமறை செழிக்க உதவவும் வேண்டிய வரம் தந்தருள எங்கள் ஆண்டவராகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக தூய ஆவியின் தூண்டுதலால் உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

No comments:

Post a Comment